close
Choose your channels

பிரபல நடிகரின் மனைவில் தூக்கில் தொங்கி தற்கொலை: திருமணமான ஒன்றரை வருடத்தில் விபரீதம்!

Saturday, May 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் ஒருவரின் மனைவி திருமணமான ஒன்றரை வருடத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல மலையாள நடிகர் உன்னி தேவ், மலையாள திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் திருமணம் நடந்தது. இருவரும் எர்ணாகுளம் பகுதியில் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் உன்னி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் உன்னியின் மனைவி பிரியங்கா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்கொலைக்கு முந்தைய நாள் பிரியங்கா காவல் நிலையத்தில் தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் அளித்துள்ளார் என்பதும் புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த பிரியங்காவின் குடும்பத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது அவரது உடலில் காயம் இருந்ததாகவும் பிரியங்காவை அவரது கணவர் உன்னி அடித்துத் துன்புறுத்தியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் பிரியங்காவின் நகைகளை எல்லாம் விற்று உன்னி செலவு செய்து விட்டதாகவும் அதுமட்டுமின்றி பிரியங்காவின் அம்மாவிடமும் அவ்வப்போது உன்னி பணம் பெற்றுள்ளதாகவும், நகை, பணம் அனைத்தையும் செலவு செய்த பின் பிரியங்காவை அடித்து துன்புறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் உன்னி மீது நடவடிக்கை எடுக்கும்படி பிரியங்கா குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை செய்து வருவதாக தெரிகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos