close
Choose your channels

'கடாரம் கொண்டான்' படத்திற்கு மலேசியாவில் தடை! ஏன் தெரியுமா?

Monday, July 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் உருவான 'கடாரம் கொண்டான்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட நிலையில் இந்த படம் மலேசியாவில் ரிலீஸ் ஆகவில்லை. மலேசிய அரசு இந்த படத்திற்கு சென்சார் சான்று தரவில்லையாம். இந்த படத்தின் கதைப்படி மலேசியாவில் திருடனாக இருக்கும் விக்ரம், மலேசியா போலீசார்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தப்பித்து செல்வது போல் இருக்கும். எனவே தங்கள் நாட்டு போலீஸை தவறாக இந்த படத்தில் சித்தரிப்பதாக கூறி மலேசிய சென்சார் போர்டு இந்த படத்தை அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டதாம்.

இதனையடுத்து மலேசியாவில் உள்ள விக்ரம் ரசிகர்கள் 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தை சிங்கப்பூர் சென்று பார்த்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மலேசியாவில் இந்த படம் வெளியாகாததால் இந்த படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.