close
Choose your channels

மஞ்சிமா மோகனுக்கு இப்படிப்பட்ட நபர் தான் தேவையாம்!

Friday, July 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கௌதம் மேனன் இயக்கிய ’அச்சம் என்பது மடமையடா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். அதன்பின் ’சத்ரியன்’ ’இப்படை வெல்லும்’ ’தேவராட்டம்’ ’களத்தில் சந்திப்போம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார் என்பதும் தற்போது அவர் விஜய்சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’, அருண்விஜய்யின் ‘எப்.ஐ.ஆர்.’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மஞ்சிமா மோகன் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் குறிப்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிக பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் அவர் சர்வதேச சாக்லேட் தினத்தை ஒட்டி அவரே சாக்லேட் செய்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த சாக்லேட்டை அவர் தலைகுனிந்து ரசித்து பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், ‘நான் சாக்லேட்டை பார்ப்பது போன்று என்னை பார்க்கும் ஒரு நபர் தான் எனக்கு தேவை’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். மஞ்சிமாவை தலைகுனிந்து பார்க்கும் அந்த அதிர்ஷ்டசாலி யார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.