close
Choose your channels

'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அடுத்த படம்: ஹீரோ யார் தெரியுமா?

Saturday, February 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தற்போது அடுத்த படத்தை தொடங்கியுள்ளார்.

விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளரும் விஜய்யின் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோ ஒரு தமிழ் திரைப்படத்தை தயாரிக்க உள்ளார்.

‘அழகிய கண்ணே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை விஜயகுமார் என்பவர் இயக்கவிருக்கிறார். இந்த படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 15ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மகன் லியோ சிவக்குமார் நாயகனாகவும், சஞ்சிதா ஷெட்டி நாயகியாகவும் இந்த படத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராமநாதன் இசையில் வைரமுத்து பாடல்களில் இந்த படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த படத்தின் பூஜையில் திண்டுக்கல் லியோனி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.