close
Choose your channels

என்னையும் ரஜினியையும் வைத்து மீடியாக்கள் விளையாடுகின்றன: கமல்ஹாசன்

Saturday, April 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

என்னையும் ரஜினியையும் வைத்து மீடியாக்கள் விளையாடுகின்றன என கமல்ஹாசன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் ’ரஜினிகாந்துக்கு தாதா சாகிப் பால்கே விருது கொடுத்தது குறித்து கமல் பதிவு செய்த டுவீட்டில் உள்நோக்கம் இருக்கின்றதா? என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய கமல்ஹாசன், ‘எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும், அவர் திரையில் தோன்றினாலே அவரை ரசிக்கின்றார்கள் என்பது ஒருவிதமான பெர்சனாலிட்டி என்ற அர்த்தத்தில் தான் நான் கூறினேன் என்றும், நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை என்று கூறினார்.

மேலும் நான் கஷ்டப்பட்டு திரையில் செய்வதை அவர் சாதாரணமாக நடந்தே செய்து விடுகிறார் என்பது ஒருவகை வாழ்த்து தானே தவிர எந்த வகையிலும் அவரை குறைத்து மதிப்பிடுவது இல்லை என்று கூறினார். மேலும் தனக்கு முன்பே ரஜினிக்கு தாதாசாகிப் பால்கே விருது கொடுத்தது குறித்து எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை என்றும் மீடியாக்கள் தான் என்னையும் ரஜினியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.