close
Choose your channels

'மெர்சல்' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்

Wednesday, March 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி உலகம் முழுவதும் வசூலை குவித்தது. இந்த படம் அனைவருக்கும் லாபத்தை பெற்று தந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில் ஒருசிலர் இந்த படத்தின் அதிகப்படியான பட்ஜெட் மற்றும் காலதாமதம் காரணமாக நஷ்டத்தை கொடுத்துள்ளதாக பேட்டி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 'மெர்சல்' திரைப்படம் நஷ்டம் என்பது குறித்து இந்த படத்திற்கு சம்பந்தமே இல்லாதவர்கள் அளித்து வரும் பேட்டியால் எழுந்துள்ள சர்ச்சைக்கு 'மெர்சல்' தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.

'மெர்சல்' எங்கள் நிறுவனத்தின் பெருமைக்குரிய திரைப்படம். மேலும் தளபதி விஜய்யுடன் இணைந்து பணிபுரிந்ததை பெருமையாக கருதுகிறோம் என்று கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.