close
Choose your channels

சாதனை படைத்த மீராபாய் சானு....! பளுதூக்குதலுக்கு கிடைத்த பதக்கம்.....!

Saturday, July 24, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு, பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

இந்தியா சார்பாக முதல் பதக்க கணக்கை துவங்கியவர் வீராங்கனை மீராபாய் சானு. கர்ணம் மல்லேஸ்வரிக்கு பின், ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற 2-ஆவது இந்திய வீராங்கனை இவர்தான். 49 கிலோ எடைப்பிரிவில், 87 கிலோ, 84 கிலோ எடையை வெற்றிகரமாக மீராபாய் தூக்கினார். 89 கிலோ எடையை இவரால் தூக்க முடியவில்லை. இதனால் வெளிப்பதக்கம் பெற்றார்.  இந்தாண்டு சொந்த சாதனையை மட்டுமே இவரால் சமன் செய்ய முடிந்தது. கடந்த 2017-ல்  தங்கம் வென்றபோது 87 கிலோ தூக்கி சாதனை புரிந்திருந்தார்.

சீனாவைச் சேர்ந்த ஹூ ஷிஹு என்பவர் 94 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.  இது ஒலிம்பிக் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகும்.

மீராபாய் சென்ற 5 ஆண்டுகளுக்கு முன்பு ரியோவில்  ஏமாற்றத்தை சந்தித்த நிலையில், கடுமையான உழைப்பிற்கு பின் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். 2021-இல் நடைபெற்ற ஆசிய வெய்ட்லிப்டிங்கில், சுமார் 119 கிலோ எடையைத்தூக்கி  உலக சாதனை படைத்தார். கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் வழங்கப்பட்ட தங்கப் பதக்கம் இதுவாகும். இந்தியா சார்பாக விளையாடி பதக்க கணக்கை துவங்கிய மீராபாய்க்கு, பிரதமர் மோடி, ராம் நாத் கோவிந்த் உள்ளிட்ட பிரபல அரசியல்  தலைவர்கள்  வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.