close
Choose your channels

குடிபோதையில் போலீஸை தாக்கிய நடிகை மீது வழக்குப்பதிவு

Tuesday, April 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குடிபோதையில் போலீஸ்காரர்களை தாக்கிய மும்பை டிவி நடிகை ரூகி சிங் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மும்பையை சேர்ந்த மாடல் அழகியும், நடிகையுமான ரூகி சிங், கடந்த 31ம் தேதி தனது ஆண்நண்பர்கள் இருவருடன் ஓட்டல் ஒன்றுக்கு சென்றிருந்தார். அப்போது அந்த ஓட்டல் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் இதனையடுத்து அங்கு வந்த போலீசார் இரு தரப்பினர்களையும் சமாதானம் செய்ய முயன்றதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் போதை தலைக்கேறி குடிபோதையிலிருந்த நடிகை, போலீஸ்காரர்களின் ஆடைகளை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். அதன் பின் ஆண் நண்பர்களுடன் காரை எடுத்து சென்ற நடிகை ரூகி, சான்டாக்ரூஸ் சாலையில் நின்றிருந்த வாகனங்கள் மீது மோதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் அறிந்து வந்த சான்டாக்ரூஸ் போலீசார் நள்ளிரவு என்பதால் அவரை கைது செய்யாமல், ஒருசில பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.