close
Choose your channels

அடுத்த வார செமி பைனலில் நேருக்கு நேராக மோதும் மும்தாஜ்-ரித்விகா

Friday, September 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அடுத்த வார செமி பைனலில் நேருக்கு நேராக மோதும் மும்தாஜ்-ரித்விகா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க்கில் ரித்விகா தவிர அனைவரும் வெற்றிகரமாக செயல்பட்டதால் நேரடி நாமினேஷனில் இருந்து தப்பித்தனர். ரித்விகா மட்டும் தனக்கு கொடுத்த டாஸ்க்கில் வெற்றி பெறமுடியவில்லை. அவர் எவ்வளவோ முயற்சித்தும் மும்தாஜை டாஸ்க் செய்ய வைக்க முடியவில்லை. இதனால் ரித்விகா நேரடியாக நாமினேஷன் செய்யப்பட்டதால் மிகுந்த அப்செட்டில் உள்ளார். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சி குறித்து முதல் சீசன் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய ஆர்த்தி தனது சமூகவலைத்தளத்தில் கூறுகையில், 'எல்லாரும் "தியாக த்தலைவிகள், மும்தாஜ் மட்டும் "புரட்சித் தலைவி " என்று கிண்டலடித்துள்ளார்.

இந்த நிலையில் மும்தாஜின் பிடிவாதம் சக போட்டியாளர்களை அதிருப்தி மற்றும் ஆத்திரத்தை வரவழைத்துள்ளது. எனவே இந்த வாரம் அனைவருமே மும்தாஜை நாமினேட் செய்ய முடிவு செய்துள்ளனர். அப்படி ஒருவேளை நடந்தால் மும்தாஜ் மற்றும் ரித்விகா மட்டுமே எவிக்சன் பட்டியலில் இருப்பார்கள். இது எனக்கு ஒரு செமி பைனல் போல, மும்தாஜூடன் மோத தயார் என்று விஜயலட்சுமியிடம் ரித்விகா ஆவேசமாக கூறினார்.

ஐஸ்வர்யாவை அடுத்து பார்வையாளர்களின் அதிருப்திக்கு ஆளாகியிருக்கும் அடுத்த நபர் மும்தாஜ் தான் என்பதால் மும்தாஜ் மற்றும் ரித்விகா இடையே போட்டி ஏற்பட்டால் நிச்சயம் மும்தாஜ் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இந்த வாரம் ஐஸ்வர்யாவும், அடுத்த வாரம் மும்தாஜூம் வெளியேறிவிட்டால் அடுத்த இரண்டு வாரங்கள் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.