close
Choose your channels

பிரபல நடிகையை பாராட்டி நடிகர் சங்கம் அறிக்கை

Saturday, February 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடிகை அமலாபால் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை தொழிலதிபர் மீது தைரியமாக புகார் கொடுத்து அவரை சிறைக்கு தள்ளிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்று நடிகைகள் மட்டுமின்றி ஒவ்வொரு பெண்ணும் தங்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை துணிந்து வெளிப்படுத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் அமலாபாலின் தைரியத்தை பாராட்டி ஏற்கனவே நடிகர் விஷால் தனது டுவிட்டரில் பதிவு செய்திருக்கும் நிலையில் தற்போது நடிகர் சங்கமும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:

சமீபத்தில் பிரபல நடிகை அமலாபால் தனக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் காவல்துறையினரிடம் புகாரும் அளித்தார். இதனை தொடர்ந்து சென்னை மாம்பலம் R1 காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் நேரடியாக விசாரித்து அந்த நபரை கைது செய்தது. காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு, பல நடிகைகள் தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லை பற்றி வெளியில் சொல்ல பயந்தாலும் நடிகை அமலாபால் தைரியமாக புகார் செய்ததற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறது.

இவ்வாறு நடிகர் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.