close
Choose your channels

இன்று கடற்கரை, நாளை நாடு முழுவதும்: கமல் ரசிகர்கள் ஆரம்பித்த சுத்தப்பணி

Saturday, February 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி அதிகாரபூர்வமாக அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் இன்று முதல் தங்களுடைய சுத்தப்பணியை ஆரம்பித்துள்ளனர். இன்று சென்னை, திருவள்ளூர் மாவட்ட கமல் ரசிகர்கள் சுமார் 500 பேர், சென்னை பெசண்ட் நகர் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் அந்த பகுதி மக்களும் இணைந்து கடற்கரையில் இருந்த குப்பைகளை அகற்றினர்.

மேலும் கடற்கரையில் போடப்படும் குப்பைகள் கடலில் கலந்து கடல்வாழ் உயிரினங்களான ஆமை போன்றவை பாதிக்கப்படுவதாகவும், எனவே கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இன்று தாங்கள் கடற்கரையை சுத்தப்படுத்துவது போல் வரும் 21ஆம் தேதி முதல் கமல்ஹாசன், கட்சி தொடங்கி நாட்டை சுத்தப்படுத்துவார் என்றும் அவர்கள் பொதுமக்களிடம் கூறினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.