close
Choose your channels

நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்படும்: நடிகர் ராதாரவி பேட்டி

Wednesday, June 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னையில் உள்ள ஜானகி எம்ஜிஆர் கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மனாபன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி மற்றும் பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணி என இரண்டு அணிகளிலும் சேர்த்து மொத்தம் 79 பேர் போட்டியிடுகின்றனர். தலைவர், செயலாளர், பொருளாளர், துணை தலைவர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு போட்டியிட்ட சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகிய இருவரும் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அவர்கள் போட்டியிடவில்லை. இந்த நிலையில் இந்த தேர்தல் குறித்து திருச்சியில் பேட்டியளித்த நடிகர் ராதாரவி, 'இது சட்டவிரோதமான தேர்தல் என்பதால் நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. வருகிற 13 ம் தேதி நீதிமன்றம் மூலம் நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்படும்' என்று கூறினார். ராதாரவியின் இந்த பேட்டி நடிகர் சங்க உறுப்பினர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.