close
Choose your channels

மகாபாரத 'திரெளபதி' கேர்கடரில் நயன்தாரா?

Tuesday, July 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களின் வெற்றியை அடுத்து 'சங்கமித்ரா' உள்பட பல சரித்திர படங்கள் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் கன்னடத்தில் தயாராகி வரும் 'குருஷேத்திரா'. மகாபாரத கதையை இயக்குனர் நாகண்ணா பிரமாண்டமாக இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் துரியோதனன் கேரக்டரில் தர்ஷன், கர்ணன் கேரக்டரில் ரவிச்சந்திரன், பீஷ்மர் கேரக்டரில் அம்ரீஷ் நடித்து வருகின்றனர்.

பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த படத்தில் திரெளபதி கேரக்டரில் நடிக்க நயன்தாராவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நயன்தாரா விரைவில் இந்த படத்தில் நடிப்பது குறித்து முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே நயன்தாரா 'சூப்பர்' என்ற கன்னட படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டால் இது அவருக்கு இரண்டாவது கன்னட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.