close
Choose your channels

நயன்தாரா பெற்ற முதல் சர்வதேச விருது! வைரல் புகைப்படங்கள்!

Sunday, August 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கினார்கள் என்பதும் இந்த நிறுவனம் பல திரைப்படங்களை தயாரித்தும், ஒரு சில திரைப்படங்களை விநியோகம் செய்தும் வருகிறது என்பதும் தெரிந்ததே

அந்த வகையில் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் வினியோகம் செய்த முதல் திரைப்படம் ’கூழாங்கல்’. இயக்குனர் வினோத் என்பவர் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த திரைப்படம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளது என்பதும் இந்த விருதை வென்றுள்ள முதல் தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருது சமீபத்தில் படக்குழுவினர்களுக்கு அளிக்கப்பட்டது.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன், ‘எங்களுக்கு கிடைத்த முதல் சர்வதேச விருது’ என்று கூறி விருதுடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் விருதுடன் இருக்கும் காட்சி உள்ளது. இதனை அடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு குடிகார தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவுகளை சிறப்பாக கூறிய படம் தான் ‘கூழங்கல்’ என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.