close
Choose your channels

மீண்டும் ரிஸ்க்கான கேரக்டரில் நயன்தாரா?

Saturday, March 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபலமான நடிகைகள் மாற்றுத்திறனாளி என்ற ரிஸ்க்கான வேடத்தில் நடிக்க தயக்கம் காட்டுவார்கள். குறிப்பாக காது கேட்காத, வாய் பேசமுடியாத கேரக்டர்களில் நடிப்பது அபூர்வம். ஆனால் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டரை அப்படியே உள்வாங்கி நடித்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமீபத்தில் 'நானும் ரெளடிதான்' படத்தில் காது கேட்க முடியாத காதம்பரி என்ற கேரக்டரில் நடித்து பெரும் பாராட்டுக்களை பெற்றார். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு பிலிம்பேர் விருதும் கிடைத்தது.

இந்த நிலையில் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்றாகிய 'கோலமாவு கோகிலா' படத்தில் மீண்டும் மாற்றுத்திறனாளி கேரக்டரில் அவர் நடித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆம் இந்த படத்தில் அவர் வாய்பேச முடியாத கேரக்டரில் நடித்துள்ளாராம். எந்த ஒரு ரிஸ்க்கான கேரக்டரையும் சவாலாக ஏற்று நடித்து வரும் நயன்தாரா, இந்த படத்திலும் புதுமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா, விஜய் டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா, யோகிபாபு, நிஷா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைக்கின்றார். லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.