close
Choose your channels

'நேர் கொண்ட பார்வை' ஸ்பெஷல் காட்சி: தாறுமாறான படம் என விமர்சனம்

Friday, August 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் சிறப்பு காட்சி இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ தியேட்டரில் திரையிடபட்டது. இந்த காட்சிக்கு போனி கபூர் மற்றும் அவரது குடும்பத்தினர், முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் அஜித்தின் மனைவி ஷாலினி ஆகியோர் வந்துள்ளதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் கூடிய செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்தவர்கள் படம் தாறுமாறாக இருப்பதாகவும் தல அஜித் இந்த படத்தின் மூலம் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்து அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர். 'நேர் கொண்ட பார்வை' படத்தின் முதல் விமர்சனமே பாசிட்டிவ் ஆக வந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்.வினோத் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். நீரவ்ஷா ஒளிப்பதிவில் கோகுல் சந்திரன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.