close
Choose your channels

'லால் சலாம்' நடிகைக்கு ஒரு ஆண்டு ஜெயில்.. கணவருக்கும் சிறை தண்டனை..!

Wednesday, July 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’லால் சலாம்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை மற்றும் அவரது கணவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்தவர்கள் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஜீவிதா தம்பதியினர் என்பது தெரிந்தது. குறிப்பாக ’இதுதாண்டா போலீஸ்’ என்ற திரைப்படம் டாக்டர் ராஜசேகருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் புகழை பெற்றுக் கொடுத்தது.

அதேபோல் ’உறவே காத்த கிளி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்த ஜீவிதா நடித்துள்ளார். இந்த தம்பதியின் இரண்டு மகள்களும் நடிகைகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் தந்தை தொடர்ந்த அவதூறு வழக்கில் ராஜசேகர் மற்றும் ஜீவிதா ஆகிய இருவருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு சிரஞ்சீவி ரத்த வங்கி மீது சர்ச்சைக்குரிய கருத்துக்களை ராஜசேகர் - ஜீவிதா தம்பதிகள் தெரிவித்ததால் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது என்று குறிப்பிட்டது. ராஜசேகர் - ஜீவிதா தம்பதிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு இருந்த போதிலும் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.