close
Choose your channels

ஆரவ்வின் மனமாற்றம் ஓவியாவை வெளியேற்றுமா?

Monday, July 31, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள பங்கேற்பாளர்களில் ஓவியாவுக்கு உண்மையாக ஆறுதல் கூறவும், அறிவுரை கூறவும் இருக்கும் ஒரே நபர் ஆரவ் என்றே கருதப்பட்டது. ஓவியாவும் ஆரவ்வை தனது குரு என்றே கூறி வந்தார்.

இந்த நிலையில் ஜூலிக்கு ரெட் கார்ப்பெட் விரிக்கும் பிரச்சனையில் ஓவியா நடந்து கொண்ட விதம் பார்வையாளர்களுக்கு தவறாக படவில்லை என்றாலும் ஆரவ்வுக்கு மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மனமாற்றம் காரணமாக அவர் இந்த வாரம் ஓவியாவை வெளியேற்ற நாமினேட் செய்துள்ளார்.

ஆனால் ஆரவ் என்ன அம்பானியே நாமினேட் செய்தாலும் ஓவியாவுக்கு எங்கள் ஆதரவு தொடரும் என ரசிகர்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர். அதேபோல் பிந்துமாதவி போன்ற எத்தனை நடிகைகள் உள்ளே வந்தாலும் ஓவியாதான் வின்னர் என்று அடித்து கூறுகின்றனர் ஓவியாவின் புரட்சி படையினர்.

எனவே ஆரவ்வின் இந்த மனமாற்றம் ஓவியாவுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றே ரசிகர்கள் பேசி கொள்கின்றனர். அதேபோல் நீங்கள் எத்தனை தடவை ஓவியாவை நாமினேட் செய்தாலும் அத்தனை தடவையும் ஓவியாவை காப்பாற்ற ரசிகர்கள் தயாராக இருக்கின்றனர் என்பது சக்திக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் ஆனால், பிந்துமாதவிக்கு நன்றாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் நாட்களில் ஓவியாவுக்கும் பிந்துமாதவிக்கும் மட்டுமே போட்டி இருக்கலாம், மற்றவர்கள் வேடிக்கை பார்த்தால் போதும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.