close
Choose your channels

கமல்ஹாசனுக்கு குறும்படம் போட்ட ஓவியா

Monday, October 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாள் நிகழ்ச்சி நேற்று சுமார் 4 மணி நேரத்திற்கும் மேல் ஒளிபரப்பானது. ஒன்றரை மணி நேரத்தில் முடிக்க வேண்டிய இந்த நிகழ்ச்சியை விளம்பரம் மற்றும் டி.ஆர்.பி காரணமாக 4 மணி நேரம் இழுத்தடித்தால் பார்வையாளர்கள் பொறுமை இழந்தனர். ஒருசிலவை தவிர பெரும்பாலும் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லை.

இந்த நிலையில் திடீர் சஸ்பென்ஸ் ஆக, நேற்றைய நிகழ்ச்சியில் ஓவியா தோன்றினார். மீண்டும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேடையேற வைத்ததற்கு நன்றி கூறிய ஓவியா, தான் இப்போது திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாகவும், காலம் வரும்போது கண்டிப்பாக மக்களுக்காக ஏதாவது செய்வேன் என்றும் கூறினார்.

மேலும் ஆரவ்வுடன் தனக்குள்ள உறவு ஆரோக்கியமானதாக உள்ளதாக கூறிய ஓவியா, தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது வெற்றியை எதிர்பார்க்கவில்லை என்றும், தனக்கு ஒரு புதிய அனுபவம் கிடைக்கவே கலந்து கொண்டதாகவும் கூறினார். பள்ளி பருவத்தில் இருந்தே தனக்கு ரேங்க் அடிப்படை பிடிக்காது என்று கூறிய ஓவியா, இந்த நிகழ்ச்சியிலும் வெற்றியாளர் என்ற வகையில் இல்லாமல் கலந்து கொண்ட அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்று கூறினார்.

மேலும் இந்த இரண்டு சீசனிலும் கமல்ஹாசன் பலருக்கு குறும்படம் போட்டு வந்த நிலையில், அவருக்கு தான் ஒரு குறும்படம் வைத்திருப்பதாக கூறி அந்த படத்தையும் ஒளிபரப்பும்படி கேட்டுக்கொண்டார். மொத்தத்தில் நேற்றைய கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் 'கலக்க போவது யார்' டீம் நிகழ்த்திய நிகழ்ச்சியும் ஓவியாவின் வருகையும் மட்டுமே பார்க்கும் வகையில் இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.