close
Choose your channels

வாயில் பரோட்டாவுடன் உயிரிழந்த தொழிலாளி: விஜய் அலுவலகத்தில் பரபரப்பு

Thursday, June 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் அலுவலகத்தில் வாயில் புரோட்டாவுடன் ஒரு தொழிலாளி மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வரும் 22ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் அவரது அலுவலகம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த அலுவலகத்தில் தங்கி பெயிண்ட் அடிக்கும் பணியை செய்து வரும் பிரபாகரன் என்பவர் நேற்று இரவு 8 மணி அளவில் குடிபோதையில் சாப்பிட பரோட்டா வாங்கி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் இன்று காலை விஜய் அலுவலகத்தை திறந்த போது வாயில் பரோட்டாவுடன் பிரபாகரன் இறந்து கிடந்ததை பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் பிரபாகரன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடிபோதையில் பரோட்டா சாப்பிட்டதால் உணவுக்குழாயில் பரோட்டா சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.