close
Choose your channels

கொரோனா விடுமுறையில் 2 முன்னணி இயக்குனர்களுடன் டிஸ்கஸ் செய்யும் பிசி ஸ்ரீராம்

Friday, May 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கோலிவுட் திரையுலகில் கடந்த இரண்டு மாதங்களாக படப்பிடிப்பு உள்பட எந்த பணியும் நடைபெறவில்லை. இருப்பினும் ஒருசிலர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தாங்கள் பணியாற்றி வரும் திரைப்படங்களின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் உள்பட ஒருசில பணிகள் குறித்த ஆலோசனைகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் அவர்கள் இரண்டு முன்னணி இயக்குநர்களிடம் தனது அடுத்த படங்கள் குறித்து வீடியோ சாட் மூலம் ஆலோசனை செய்துள்ள தகவலை அவரே தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படமான ’ராங்கி டே’ என்ற தெலுங்கு படத்தில் பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். நிதின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படம் குறித்து இயக்குனர் வெங்கியுடன் பிசி ஸ்ரீராம் ஆலோசனை செய்து வரும் புகைப்படம் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல் மாதவன் நடித்த ’யாவரும் நலம்’ உள்பட ஒருசில படங்களை இயக்கிய விக்ரம் குமாரின் அடுத்த படத்திலும் பிசி ஸ்ரீராம் பணியாற்ற உள்ளார். அவருடனும் பிசி ஸ்ரீராம் கலந்துரையாடிய புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் இந்த இரண்டு படங்க்ளின் படப்பிடிப்புகளில் பிசி ஸ்ரீராம் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.