close
Choose your channels

ராகவா லாரன்ஸூக்கு சைகை மொழியில் நன்றி கூறிய மாற்றுத்திறனாளி பெண்

Friday, April 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய திரையுலகில் மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்தவர் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் என்பது தெரிந்ததே. அவர் இப்போது வரை ரூபாய் 4 கோடிக்கு மேல் நிதியுதவி செய்துள்ளார் என்பதும் இன்னும் அவர் நிதி உதவி செய்வதற்காக காத்திருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே சென்னை ராயபுரம் பகுதி மக்களுக்கு ரூபாய் எழுபத்தைந்து இலட்சம் நிதியுதவி செய்துள்ள நிலையில் தற்போது அதே பகுதி ஏழை எளிய மக்களுக்கு மளிகைப் பொருட்களையும் அவர் வழங்கியுள்ளார் இந்த மளிகை பொருட்களை பெற்றுக் கொண்ட பலர் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு நன்றி கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் கொடுத்த மளிகை பொருட்களை பெற்று கொண்ட வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் தனது சைகை மொழியில் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.