close
Choose your channels

போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் கைது! அறிவாலயம் காரணமா?

Tuesday, September 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் விழுந்து துரதிஷ்டவசமாக மரணமடைந்த நிலையில், திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். குறிப்பாக நடிகர் விஜய் வரும் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் ’பிகில்’ திரைபடத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது யாரும் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று தனது ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார்

இந்த நிலையில் மதுரையில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக விஜய் ரசிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் தங்கபாண்டியன் என்பவரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து அந்த பகுதியில் உள்ள விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியதாக தெரிகிறது. இந்த போஸ்டர் அனுமதியின்றி ஒடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் விஜய் ரசிகர் மன்ற பொருளாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெயகார்த்திக் என்பவரை கைது செய்த போலீசார், தலைமறைவான நிலையில் சதீஷ்குமார் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இந்த போஸ்டரில் விஜய் ரசிகர் மன்ற தலைவர் தங்கபாண்டியனை பெருமைப்படுத்துவதற்காக ’தளபதியின் அறிவாலயமே’என்ற வார்த்தை அந்த போஸ்டரில் இருந்தது. இந்த வார்த்தைதான் ஒருவேளை வழக்குப்பதிவு செய்யக் காரணமாக இருக்குமோ? என்ற சந்தேகம் அந்த பகுதியில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு இருப்பதாக கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.