close
Choose your channels

வனிதா குற்றச்சாட்டுக்கு பிரதீப் பதில்.. என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

Sunday, November 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரதீப் ஆதரவாளர் தான் தன்னை தாக்கியது என வனிதா குற்றம் சாட்டிய நிலையில் அதற்கு பிரதீப் தனது சமூக வலைதளத்தின் மூலம் பதில் அளித்துள்ளார்.

நடிகை வனிதா நள்ளிரவில் தனது காரில் வீட்டிற்கு வந்தபோது திடீரென தன் முன் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தோன்றி ரெட் கார்டு கொடுக்கறீங்களா? அதுக்கு நீ என்ன சப்போர்ட் வேறயா? என்று கூறி முகத்தில் பலமாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டதாக குறிப்பிட்டு இருந்தார். இருப்பினும் தான் இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கவில்லை என்றும் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த பதிவிற்கு பிரதீப் தற்போது பதில் அளித்துள்ளார். வனிதா உடனான வாட்சப் உரையாடலை பகிர்ந்து உள்ள பிரதீப் அதில் ’ஜோவிகாவுக்கு நான் எதிரானவன் இல்லை என்று கூறிய நிலையில் ’உன்னை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, உனக்கு ரெட் கார்டு கொடுத்தது வருத்தம் அளிக்கிறது’ என்று வனிதாவும் கூறி இருந்தார்.

இதனை அடுத்து ’எனது போட்டியாளர்களுக்கு எதிராக செய்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. உங்களுக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. இருப்பினும் நான் உங்களுக்கு நேர்ந்த இந்த சம்பவத்திற்காக வருந்துகிறேன், நன்றாக ஓய்வு எடுங்கள்’ என்று கூறியுள்ளார்.

மேலும் ’ஜோவிகா புத்திசாலி, அவர் தானாகவே வெற்றி பெற்று விடுவார், உங்கள் உதவி அவருக்கு தேவையில்லை’ என்றும் பதிவு செய்துள்ளார். பிரதீப்பின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.