close
Choose your channels

திருமண செயலியில் வரன் பார்த்து சிக்கிய நடிகை… சரமாரியாக அடுக்கப்படும் குற்றச்சாட்டு!

Wednesday, May 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தான் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த ஐடி ஊழியர் ஒருவர், புகாரை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு கூறி மிரட்டுவதாக நடிகை லூப்னா அமீர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

‘கேக்கிறான் மேய்க்கிறான்’ எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை லூப்னா அமீர். இவர் ஒருசில வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை லூப்னா திருமணம் செய்துகொள்வதற்காக திருமண செயலி ஒன்றில் பதிவு செய்திருந்ததாகக் கூறியுள்ளார். அதன்மூலமாக வியாசர்பாடியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியும் ஐ.டி.ஊழியருமான மசியுல்லான்கான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் அவருடன் நெருங்கிய பழகிவந்த நிலையில் திருமணத்திற்காக முயற்சித்தபோது மசியுல்லான்கானுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதைக் கண்டுபிடித்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து மசியுல்லான்கானை விட்டு நடிகை லூப்னா விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மசியுல்லான்கான் தன் புகைப்படங்களைக் காட்டி மிரட்டியதாக திருவல்லிக்கேணி மகளிர் காவல் நிலையத்தில் நடிகை லூப்னா புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகாரின் அடிப்படையில் கைதாகி பின்பு மகியுல்லான்கான் ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். இந்நிலையில் தற்போது தன்மீதான புகாரை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு தன்னை மசியுல்லான்கானும் அவரது மனைவியும் மிரட்டுகின்றனர் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை லூப்னா புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

இதற்கிடையில் நடிகை லூப்னா அளித்த புகாரில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த மசியுல்லான்கான் பெரவள்ளூர், வேலூர், வாணியம்பாடி போன்ற காவல் நிலையங்களில் நடிகை லூப்னா அமீர் குறித்து அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளார். அதில் கருத்துவேறுபாடு காரணமாக 2020 இல் எனது முதல் மனைவியை விட்டு பிரிந்துவிட்டேன். தற்போது விவாகரத்துப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

இதனால் திருமண செயலியில் பதிவு செய்திருந்தேன். ஆனால் நடிகை லூப்னா இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் தளங்களில் ஆபாச வீடியோகளை பதிவிட்டு சம்பாதித்து வருவது தெரியவந்தது. அதனால்தான் அவரை விட்டு விலகிவந்தேன் என்றும் என்னுடன் பழகிய காலங்களில் என்னிடம் இருந்து பணம் பெற்று நிறைய செலவு செய்தார் என்றும் நடிகை லூப்னா அமீர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில், திருமண செயலியில் பதிவுசெய்து வரன்தேடிய போது மசியுல்லான்கான் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அதோடு தன்னை மிரட்டுவதாகவும் நடிகை லூப்னா அமீர் புகார் அளித்துள்ளார். இன்னொரு பக்கம் நடிகை லூப்னா ஆபாச வீடியோக்களை பதிவிட்டு சம்பாதித்து வருகிறார் என்று மசியுல்லான்கான் தொடர் குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவாகி இருக்கும் நிலையில் யார் கூறுவது உண்மை என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.