close
Choose your channels

நடிகர் அருண்விஜய் வீட்டில் நிகழ்ந்த சோகம்: தாமிராவை அடுத்து மேலும் ஒரு உயிரிழப்பு!

Tuesday, April 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரெட்டைச்சுழி, ஆண்தேவதை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் தாமிரா அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இயக்குனர் தாமிராவின் மறைவு திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளிவந்த தகவலின்படி அருண் விஜய்யின் மாமனாரும் தயாரிப்பாளருமான என்எஸ் மோகன் என்பவர் காலமான செய்தி திரையுலகினரை மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளது. அருண்விஜய் நடித்த ’வா’ ‘மாஞ்சா வேலு’, ‘தடையர தாக்க’ ‘மலைமலை’ உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தவர் என்.எஸ்.மோகன். இவர் நடிகர் அருண் விஜய்யின் மாமனாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் என்.எஸ்.மோகன் கடந்த சில நாட்களாக உடல்நலக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்று ஒரே நாளில் இரண்டு திரையுலக பிரபலங்கள் உயிரிழந்திருப்பது திரையுலகினர்களை அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.