close
Choose your channels

இளையராஜாவுக்கு உதவி செய்ய அரசு தயார்: புதுவை முதல்வர் அறிவிப்பு

Monday, May 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைஞானி இளையராஜா 1000 பாடல்களுக்கும் மேல் கம்போஸ் செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ள நிலையில் இசைக்காக அவர் மேலும் பல புதிய திட்டங்களை வைத்துள்ளார். அவற்றில் ஒன்றுதான் மியூசிக் தெரப்பி மையம் ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என்பது ஆகுக்ம்.

இசைஞானி இளையராஜா மியூசிக் தெரப்பி மையத்தை புதுச்சேரியில் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான இடம் ஒதுக்கி தருமாறு புதுவை அரசிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் இசைஞானியின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு அதற்கான இடம் வழங்க புதுவை அரசு தயாராக இருப்பதாக சமீபத்தில் நடந்த கம்பன் விழா ஒன்றில் புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். விரைவில் இசைஞானியின் கனவான மியூசிக் தெரப்பில் புதுவையில் அமையவுள்ளது என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.