close
Choose your channels

5000 பேர்களுக்கு ஒளி கொடுத்தவர் அஜித்: ராதாரவி

Saturday, October 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒருசில ஆயிரங்கள் தானதர்மம் செய்தாலே விளம்பரப்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் இந்த காலத்தில் யாருக்குமே தெரியாமல், எந்தவித விளம்பரமும் இல்லாமல் அஜித் செய்த உதவி குறித்து நடிகர் ராதாரவி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் மகன் விஜய்சங்கர் ஒரு கண் டாக்டர் என்பது பலருக்கு தெரிந்திருக்கும். திரையுலகில் உள்ள பலர் இவரிடம் தான் காண்ட்ராக்ட் உள்ளிட்ட கண் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இவரை ஒருமுறை நடிகர் ராதாரவி சந்தித்து பேசியபோது, 'அஜித் அடிக்கடி தனது மருத்துவமனைக்கு வருவது குறித்து விஜய் சங்கர் கூறினாராம்.

அஜித் எதற்கு கண் மருத்துவமனைக்கு அடிக்கடி வருகிறார் என்று ராதாரவி கேட்டதற்கு 'கண் சிகிச்சை செய்பவர்களுக்கு பண உதவி செய்ய வருவார் என்றும் இதுவரை சுமார் 5000 பேர்களின் அறுவை சிகிச்சைகளுக்கு அவர் பணம் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால் இதுகுறித்து அவர் யாரிடமும் இந்த உதவி குறித்து கூறியதில்லை என்றும் எந்தவித விளம்பரமும் இல்லாமல் 5000 பேர்களின் கண்களுக்கு ஒளி கொடுத்தவர் அஜித் என்றும் ராதாரவி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அஜித்தை தான் பார்த்து வெகுநாட்கள் ஆகிவிட்டாலும் அவரை பற்றி கேள்விப்படும்போது தனக்கு பெருமையாக இருப்பதாகவும், குமணன், கர்ணன் போன்ற வள்ளல்களுக்கு இணையானவர் அஜித் என்றும் ராதாரவி கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.