close
Choose your channels

நடிகர் ராகவா லாரன்ஸ் மருத்துவமனையில் அனுமதி

Friday, January 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் கடந்த நான்கு நாட்களாக மெரீனாவில் நடைபெற்று வரும் மாணவர்களின் ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்து வருகிறார். போராட்டக்காரர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருந்து பொருட்களுக்காக ரூ.1 கோடி கூட செலவு செய்ய தயார் என்று நேற்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர் உடல்நலமின்றி இருந்த நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டக்களத்திற்கு நேரில் வந்து ஆதரவு கொடுத்தார். இந்நிலையில் இன்று அவர் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்த ராகவா லாரன்ஸ் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் போராட்டம் செய்யும் மாணவர்கள் உள்பட அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.