close
Choose your channels

இலவச செக்ஸ்ன்னா இதைவிட அதிகமா கூடுவாங்க- ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்திய ராதா ராஜன்

Friday, January 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைமையின்றி, எந்த ஒரு தனிப்பட்ட தலைமையின்றி, தன்னலம் கருதாது இண்டர்நெட் மூலம் இணைந்து இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராடி வருகின்றனர். ஒரே ஒரு இரவு புத்தாண்டு கொண்டாடிய பெங்களூரில் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். ஆனால் மூன்று இரவுகள் தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையிலும் எந்த ஒரு பெண்ணுக்கும் எவ்வித பிரச்சனையும் எழாமல் நாகரீகமான முறையில் உலகிற்கே ஒரு வழிகாட்டியாக இந்த போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் இளைஞர்களின் இந்த புனிதமான புரட்சியை பீட்டா ஆர்வலர் ஒருவர் கொச்சைப்படுத்தியுள்ளார். இந்த போராட்டம் குறித்து பீட்டா அமைப்பின் ஆர்வலர் ராதா ராஜன் என்பவர் பிபிசி தமிழ் வானொலிக்கு பேட்டி அளித்தபோது 'இலவசமாக செக்ஸ் கொடுக்குறதா சொன்னாக் கூட இதைவிட அதிகமான பேர் வருவாங்க. ஒரு பிரச்சனை வந்தா, அதுக்கு மக்கள் தெருவுக்கு வந்துதான் போராடனும்றது அவசியம் இல்லை.
நம்ம நாட்டு மக்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவங்க அதனால் உச்சநீதிமன்றம் சொன்ன தீர்ப்ப மதிக்கணும்' என்று தெரிவித்துளார். இவருடைய இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு சமூக இணையதளங்களில் கடும் கண்டங்கள் வலுத்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.