close
Choose your channels

தூத்துகுடி துப்பாக்கி சூடு: ரஜினிகாந்த் நிவாரண உதவி அறிவிப்பு

Wednesday, May 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தையும் காயம் அடைந்தவர்களையும் சந்திக்க இன்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துகுடி சென்றுள்ளார். தூத்துகுடி விமான நிலையத்தில் இருந்து அவர் தற்போது நகருக்குள் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் அளித்த தகவலின்படி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.2 லட்ச ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையில் ரஜினிகாந்த் நிவாரண உதவி செய்யவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உடை மற்றும் பழங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

மேலும் இந்த சந்திப்பு முடிந்ததும் தனியார் விடுதி ஒன்றில் ஓய்வு எடுக்கும் ரஜினிகாந்த், அங்கு ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.