close
Choose your channels

தளபதியின் தாயாருடன் தலைவர்: வைரலாகும் புகைப்படம்

Monday, January 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தளபதி விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் அவர்களை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற சஞ்சய் இல்ல திருமணத்தில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதே நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யின் தாயாரும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் மனைவியுமான ஷோபா சந்திரசேகரர் அவர்களும் வந்திருந்தார். அப்போது இருவரும் சந்தித்து ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த புகைப்படம் ஃபேஸ்புக், டுவிட்டர் உள்பட சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'நான் சிகப்பு மனிதன்' என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார் என்பதும், இந்த படத்தில் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.