close
Choose your channels

சாத்தான்குளம் விவகாரம்: ரஜினியின் வித்தியாசமான அணுகுமுறை

Sunday, June 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகியோர் மர்மமான முறையில் காவல் நிலையத்தில் மரணமடைந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது என்று கூறலாம். அமெரிக்காவின் ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு இணையாக இந்த மரணம் கருதப்பட்டு சமூக வலைதளங்களில் பலர் கொந்தளித்து எழுந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக தமிழ் திரையுலக பிரபலங்கள் சூர்யா உள்பட பலரும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் இதுகுறித்து தங்களுடைய ஆவேசமான கருத்துக்களை தெரிவித்து காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் காவல் துறையினரால் மர்மமான முறையில் மரணமடைந்த ஜெயராஜின் மனைவி மற்றும் ஃபென்னிக்ஸ் அவர்களின் தாயாரிடம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருப்பதாக ரஜினியின் தரப்பினர் உறுதி செய்துள்ளனர்

திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளத்தில் கண்டனங்களை பதிவு செய்து தங்களுடைய ஆவேசமான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினர்களை செல்போனில் தொடர்புகொண்டு ஆறுதலாக சில வார்த்தைகள் பேசிய ரஜினியின் வித்தியாசமான அணுகுமுறையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.