close
Choose your channels

சூர்யாவுக்கு பதில் நான் பேசியிருந்தால்? காப்பான்' விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

Monday, July 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா, ஆர்யா, சாயிஷா, மோகன்லால் நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் 'காப்பான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் 'காப்பான்' படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சிறப்புரையாற்றிய ரஜினிகாந்த், 'புதிய கல்வி கொள்கை குறித்த சூர்யாவின் கருத்தை, தான் ஆமோதிப்பதாக தெரிவித்தார். மேலும் புதிய கல்வி கொள்கை பற்றி, தான் பேசியிருந்தால் பிரதமர் மோடிக்கே கேட்டிருக்கும் என சிலர் சொல்கிறார்கள். ஆனால் சூர்யா பேசியதே பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை புத்தக்கதை படித்தவுடன் அவர் மீது இன்னும் மதிப்பு அதிகமானதாகவும், தமிழாற்றுப்படையில் தமிழ் பற்றிய தகவல்கள் அனைத்தும் உள்ளதாகவும் தெரிவித்த ரஜினிகாந்த், தானும் கேவி ஆனந்த்துடன் படம் செய்திருக்கவேண்டியது என்றும், அந்த வாய்ப்பை தான் தவறவிட்டுவிட்டுவிட்டதாகவும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.