close
Choose your channels

நயன்தாரா பட இயக்குனரின் அடுத்த படத்தில் 'பாகுபலி' நடிகர்: 3 மொழிகளில் உருவாகிறது!

Monday, August 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்று ’நெற்றிக்கண்’ என்பதும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை மிலந்த் ராவ் இயக்கி வருகிறார் என்பதும் இவர் ஏற்கனவே ’அவள்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இயக்குனர் மிலந்த் ராவ் கூறியுள்ளார். நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படம் கிரிஷ் இசையில், கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவில், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’நெற்றிக்கண்’ படத்தை முடித்தவுடன் தனது அடுத்தப் படமும் ஒரு சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படம் என்றும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாராக இருப்பதாகவும் மிலந்த் ராவ் அறிவித்துள்ளார்.

’பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்த ராணா இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு ’நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்த உடன் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் ‘அவள்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கதை தயாராகி விட்டதாகவும் விரைவில் அந்தப் படத்தையும் தொடங்க இருப்பதாகவும் இயக்குனர் மிலந்த் ராவ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.