close
Choose your channels

நடன இயக்குனராக மாறும் 'ரெளடி பேபி'?

Tuesday, July 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ’பிரேமம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சாய்பல்லவி அகில இந்திய அளவில் புகழ் பெற்றார் என்பதும் இந்த படத்தில் அவர் நடித்த மலர் டீச்சர் என்ற கேரக்டர் அனைவரின் விருப்பத்துக்குரிய கேரக்டராக மாறியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதனையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்த சாய்பல்லவி தற்போது தெலுங்கில் இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிப்பு மட்டுமின்றி சிறு வயதிலிருந்தே நடனத்திலும் சாய்பல்லவிக்கு பெரும் விருப்பம் உண்டு, விஜய் டிவியில் நடந்த ’உங்களில் யார் பிரபுதேவா’ என்ற நிகழ்ச்சியிலும் சாய்பல்லவி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தெலுங்கு ரியாலிட்டி நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். 

இந்த நிலையில் தற்போது ஒரு திரைப்படத்திற்கு நடனம் அமைக்க அவர் ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சாய் பல்லவி நடித்த ’பிடா’ என்ற படத்தை இயக்கிய சேகர் கம்முலா தற்போது ’லவ் ஸ்டோரி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைக்கும்படி நடிகை சாய் பல்லவியிடம் இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அதற்கு சாய்பல்லவி ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

ஏற்கனவே எம்பிபிஎஸ் படித்து முடித்துள்ள சாய்பல்லவி தற்போது முன்னணி நடிகையாக இருந்து வரும் நிலையில் நடன இயக்குனராக மாறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.