close
Choose your channels

நாகார்ஜூனா குடும்பத்தின் முக்கிய நபருக்கு வாழ்த்து கூறிய சமந்தா: ஏன் தெரியுமா?

Saturday, April 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நடிகை சமந்தா திடீரென நாகார்ஜூனா குடும்பத்தை சேர்ந்த முக்கிய நபர் ஒருவருக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகிய இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரிவதாக அறிவித்தனர். இந்த பிரிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . விவாகரத்துக்கு பின்னர் நாகார்ஜூனா குடும்பத்தைச் சேர்ந்த யாரிடமும் சமந்தா தொடர்பில் இல்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென நாக சைதன்யாவின் சகோதரர் அகில் அக்கினேனி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய போது அவருக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா வாழ்த்து கூறியுள்ளார்.அந்த வாழ்த்தில், ‘இந்த ஆண்டு உங்களுக்கு மிகச் சிறந்த ஆண்டாக இருக்கும் என்றும் இந்த ஆண்டு நீங்கள் நினைத்த அனைத்துமே கிடைக்க நான் இறைவனை வேண்டுகிறேன் என்றும் கடவுள் உங்களுக்கு அருள் புரிவார் என்று தனது வாழ்த்துச் செய்தியில் சமந்தா கூறியுள்ளார்.

நாகசைதன்யாவின் பிறந்தநாளுக்கு கூட வாழ்த்து தெரிவிக்காத சமந்தா, அவருடைய சகோதரருக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்தது ஏன் என்ற கேள்வி ரசிகர் மனதில் எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.