close
Choose your channels

தந்தை விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்வேன்: கெளசல்யா

Monday, June 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் சற்றுமுன் வெளியான தீர்ப்பில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த கௌசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்படுவதாகவும், தாய் கௌசல்யாவின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்த காவல் துறையின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று வெளியான தீர்ப்பின் மூலம் கௌசல்யாவின் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருமே இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சங்கரின் மனைவி கவுசல்யா ’சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம் என்றும் சங்கர் கொலை வழக்கில் தனது தந்தை விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்றும் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தாய் மற்றும் தந்தைக்கு தண்டனை வாங்கித் தந்தே தீருவேன் என்று உறுதியுடன் இருக்கும் கௌசல்யாவின் கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.