close
Choose your channels

சந்தானம் நடிக்கும் முதல் மும்மொழி திரைப்படம்: நாயகி அறிவிப்பு

Tuesday, April 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்கள் தற்போது பான் இந்திய திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்ட நிலையில் நடிகர் சந்தானம் முதல் முதலாக மும்மொழி படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.

தமிழ் காமெடி நடிகராக இருந்த சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ’ஏஜண்ட் கண்ணாயிரம்’ மற்றும் ’குலுகுலு’ ஆகிய திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் சந்தானம் நடிக்கும் மும்மொழி திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த்ராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக தன்யா ஹோப் நடிக்கிறார். இவர் ஏற்கனவே அருண் விஜய் நடித்த ’தடம்’ மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த ’தாராள பிரபு’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் சந்தானம் இதுவரை நடித்திராத புதிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாக இருப்பதாகவும் இயக்குனர் பிரசாந்த் ராஜ் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் ராகினி திவேதி நடிக்க இருப்பதாகவும் அதைத்தவிர பாக்யராஜ், செந்தில், கோவை சரளா, மனோபாலா, பிரம்மானந்தம் உள்ளிட்டோரும் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாங்காக், லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இயக்குனர் பிரசாந்த்ராஜ் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.