close
Choose your channels

சென்னை காவல்துறைக்கு சூர்யா செய்த மகத்தான உதவி: குவியும் வாழ்த்துக்கள்

Tuesday, April 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை காவல் துறைக்கு சூர்யா செய்த மகத்தான உதவியை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, ஏற்கனவே அகரம் பவுண்டேஷன் என்ற ஒரு அமைப்பை நடத்தி அதன் மூலம் ஏராளமான ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது சென்னை காவல் துறையின் காவல் கரங்களுக்கு வேன் ஒன்றை வழங்கியுள்ளார். பிளாட்பாரங்களில் வசிக்கும் மற்றும் வீடற்று இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு மருத்துவம் மற்றும் உணவு உதவி செய்வதற்காக காவல்துறையின் காவல் கரங்களுக்கு சூர்யா இந்த வேனை வழங்கியுள்ளார்.

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் கொடியசைத்து இந்த வேனை இயக்கி வைத்தார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.