close
Choose your channels

சந்தானம் பட நாயகிக்கு கொரோனா தொற்று: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கோரிக்கை!

Tuesday, March 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சந்தானம் நடித்த படத்தில் நாயகியாக நடித்த நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சந்தானம் நடித்த ’சக்க போடு போடு ராஜா’ என்ற திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் வைபவி சாண்டில்யா. இவர் அந்த படத்தை அடுத்து ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ ’கேப்மாரி’ ’சர்வர் சுந்தரம்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஒரு சில கன்னட படங்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை வைபவி சாண்டில்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தன்னிடம் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறும், மேலும் பொதுமக்கள் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க பாதுகாப்புடன் இருக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் அவரது ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.