close
Choose your channels

விவேக் அஸ்தி மீது மரக்கன்றை நட்ட உறவினர்கள்!

Monday, April 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்பால் காலமான நிலையில் அவரது இறுதி சடங்கிற்கு திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் விவேக்கின் அஸ்தி அவருடைய சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகில் உள்ள பெருங்கோட்டூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பெருங்கோட்டூர் கிராமத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் விவேக்கின் அஸ்தியை வைத்து அதற்கு குடும்பத்தினர் மரியாதை செய்தனர்.

அதன்பின்னர் அங்கு தோண்டப்பட்ட குழியில் விவேக்கின் அஸ்தியை வைத்து மலர் தூவி உறவினர்கள் அதன்மீது மரக்கன்றுகளை நட்டனர். இந்த மரக்கன்றுகள் வளர்ந்து பெரிய மரமாகி விவேக்கின் நினைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.