close
Choose your channels

சூர்யாவுடன் நேருக்கு நேர் மோதும் சசிகுமார்

Wednesday, December 14, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர்-தயாரிப்பாளர் சசிகுமாரின் அடுத்த படம் பலே வெள்ளையத் தேவா` டிசம்பர் 23, 2016 அன்று கிறிஸ்துமஸ் விடுமுறை சீசனுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் சோலை பிரகாஷ் இயக்கியிருக்கும் `பலே வெள்ளையத் தேவா` படத்தில் சசிகுமார் கதாநாயகனாகனாக நடித்துள்ளார். மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா இந்தப் படத்தின் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் கால் பதிக்கிறார். இவர்களுடன் கோவை சரளா, சங்கிலி முருகன், ரோஹினி, பாலா சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தர்புகா சிவா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவையும் பிரவீண் ஆண்டனி படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.
சசிகுமாரின் கம்பெனி பிரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படம், இந்த ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியாகும் நான்காவது படம் ஆகும். இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை` பொங்கல் பண்டிகைக்கும், வெற்றிவேல்` ஏப்ரல் மாதமும், `கிடாரி` செப்டம்பர் மாதமும் வெளியாகியிருந்தன.
சூர்யா-அனுஷ்கா-ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஹரி இயக்கியிருக்கும் எஸ் 3` படம் இதே டிசம்பர் 23 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் வெற்றிபெற IndiaGlitzன் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.