close
Choose your channels

ரசிகர்களுக்கு ஷங்கர் படக்குழுவினர்களின் எச்சரிக்கை!

Thursday, February 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஓபன் வெளியில் நடத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை இருப்பதால் படப்பிடிப்பை காண நூற்றுக்கணக்கானோர் அந்த பகுதியில் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களையும், படப்பிடிப்பு தளத்தையும் ஒரு சிலர் மொபைல் போனில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்வதாக படக்குழுவினர்களுக்கு புகார்கள் வந்தது. இதனை அடுத்து ஷங்கரின் ’ஆர்.சி. 15’ படக்குழு ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஓபன் வெளியில் நடைபெறும் படப்பிடிப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை யாரும் பதிவு செய்ய வேண்டாம் என்றும் அவ்வாறு பதிவு செய்தால் அவர்களது சமூக வலைதள கணக்குகளை கண்டறிந்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராம்சரண் ஜோடியாக கைரா அத்வானி நடிக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos