close
Choose your channels

பாலாஜி முருகதாஸை சகோதரராக ஏற்று கொண்ட ஷிவானி: அப்ப பிக்பாஸில் நடந்ததெல்லாம் என்ன?

Monday, August 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று நாடு முழுவதும் ரக்சா பந்தன் கொண்டாடப்பட்ட நிலையில் பெரும்பாலான நட்சத்திரங்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ராக்கி கயிறு கட்டி சகோதர்களாக ஏற்று கொண்டனர் என்பதும் குறிப்பாக நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு ராக்கி கட்டிய புகைப்படம் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தபோது, ‘நீங்கள் ரக்ஷா பந்தன் தினத்தில் யாருக்கு ராக்கி கட்டினீர்கள் என்று கேட்ட கேள்விக்கு ’பாலாவுக்கு’ என்று பதில் கூறி பாலாஜிக்கு ரக்ஷா பந்தன் தினத்தன்று ராகி கயிறு கட்டிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஷிவானி நாராயணன் மற்றும் பாலாஜி முருகதாஸ் ஆகிய இருவரும் காதலிப்பது போன்ற பல சம்பவங்கள் நடந்த நிலையில் தற்போது திடீரென அவர் பாலாஜியை சகோதரராக ஏற்றுக்கொண்டு ரக்ஷா பந்தன் தினத்தில் ராக்கி கயிறு கட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளீர்களா? என்று கேள்விக்கு ‘ஆம்’ என்று ஷிவானி பதில் கூறியுள்ளார். ஏற்கனவே கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.