close
Choose your channels

ஒரே படத்துடன் திரையுலகில் இருந்து 'குணா' நாயகி வெளியேறியது ஏன்? 33 ஆண்டு ரகசியம்..!

Tuesday, March 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 1991 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ‘குணா’ திரைப்படம் வெளியானபோது அனைத்து ஊடகங்களும் அந்த படத்தை பாராட்டினாலும் ரசிகர்கள் மத்தியில் அந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றும் ஒரு சிலர் மட்டுமே அந்த படத்தை கொண்டாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் 33 ஆண்டுகள் கழித்து மலையாளத்தில் வெளியான ’மஞ்சும்மள் பாய்ஸ்’ என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதன் காரணமாக தற்போது மீண்டும் ‘குணா’ ட்ரெண்டில் வந்து உள்ளது என்பதும் இன்றைய இளைய தலைமுறையினர் இந்த படத்தை தற்போது கொண்டாடி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

33 ஆண்டுகள் கழித்து ‘குணா’ படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள், பாடல் ஒலிப்பதிவின் போது நடந்த சம்பவங்கள் உள்பட பல விஷயங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ‘குணா’ படத்தில் நாயகி ஆக நடித்த ரோஷினி அதன் பின்னர் ஒரு படத்தில் கூட நடிக்காத நிலையில் அவர் என்ன ஆனார்? எங்கே இருக்கிறார்? என்பது கூட திரையுலகினருக்கு தெரியவில்லை. இது குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த ‘குணா’ படத்தின் இயக்குனர் சந்தானபாரதி கூறியபோது, ‘ரோஷினி நடிக்கும் போது இந்த ஒரு படத்துடன் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று தான் கூறினார். அவர் தொடர்ந்து நடிப்பதை விரும்பவில்லை, அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற எண்ணமும் இல்லை, அவரது குடும்பத்தினர்கள் அவர் நடிகையாக தொடர்வதை விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.

‘குணா’ படத்திற்கு பிறகு அந்த படத்தின் நாயகி ரோஷினி ஏன் நடிக்கவில்லை என்ற ரகசியம் 33 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சந்தான பாரதி பேட்டியின் மூலம் தெரிய வந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.