close
Choose your channels

நடிகர் தவசிக்கு சிம்பு அளித்த மிகப்பெரிய தொகை!

Wednesday, November 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’கருப்பன் குசும்புக்காரன்’ என்ற டயலாக் மூலம் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் தவசி ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற திரைப்படத்தில் பஞ்சாயத்து காட்சியில் நடிப்பில் தூள் கிளப்பியிருப்பார். அத்தகைய திறமை வாய்ந்த நடிகர் தவசி கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சைக்காக திரையுலகினர் பலரும் உதவி செய்து வருகின்றனர்

குறிப்பாக நடிகர் விஜய் சேதுபதி ரூபாய் 1 லட்சமும், நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய் 25 ஆயிரமும், நடிகர் சூரி ரூபாய் 20 ஆயிரமும் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிகர் தவசியிடம் போனில் பேசி அவர் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்ததோடு அவரது குடும்பத்தினருக்கும் நம்பிக்கை தரும் வகையில் பேசியுள்ளார்

இந்த நிலையில் மேலும் சில நடிகர்கள் நடிகர் தவசிக்கு நிதியுதவி அளிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு நடிகர் சிலம்பரசன் ரூபாய் ஒரு லட்சம் நிதியுதவி செய்துள்ளார். இந்த தொகை தவசி குடும்பத்தினரை பொறுத்தவரை மிகப் பெரிய தொகை என்பதும் அவருடைய குடும்பத்திற்கு இந்த தொகை மிகவும் உதவியாக உதவிகரமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.