close
Choose your channels

சிம்புவின் 'மாநாடு' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்!

Tuesday, December 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்குவதாக இருந்த ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்குவதாக இருந்தது. ஆனால் திடீரென சிம்புவுக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இந்த படம் கைவிடப்பட்டதாகவும், இந்த படத்தில் சிம்புவுக்கு பதில் வேறு நடிகர் நடிப்பார் என்றும் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்

ஆனால் அதன் பின்னர் நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மீண்டும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 20ஆம் தேதி தொடங்கும் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த தகவல் ஒன்றை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு தேதி மட்டும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து அவர் சிம்பு ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். வரும் பொங்கல் தினத்தில் சிம்புவின் மாநாடு படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.