close
Choose your channels

மீண்டும் இரட்டை வேடங்களில் சிம்பு!

Friday, October 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'மன்மதன்' மற்றும் 'சிலம்பாட்டம்' படங்களை அடுத்து சிம்பு மீண்டும் இரட்டை வேடங்களில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்திற்கு பின்னர் சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் 'விண்ணை தாண்டி வருவாயா மற்றும் 'அச்சம் என்பது மடமையடா' படங்களுக்கு பின்னர் மீண்டும் சிம்பு, கவுதம் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் புதிய படம் ஒன்று விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த படத்தில்தான் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்றும் முழுக்க முழுக்க கமர்சியல் அம்சங்கள் நிறைந்த படம் இது என்றும் கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.