close
Choose your channels

தாத்தா கனவுல வந்து அடிப்பாரு! கண்ணதாசம் பேரனிடம் கூறிய சிவகார்த்திகேயன்

Thursday, July 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்து வரும் ’டாக்டர்’ படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்ற நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் சிங்கிள் பாடலான ‘செல்லம்மா’ என்ற பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் அனைத்து தரப்பினர்களையும், குறிப்பாக இளைஞர்களை கவர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் என்ற பாடலை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசன் இந்த பாடல் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’சிவகார்த்திகேயன்! கவிஞரே பயங்கர பார்முல இருக்கீங்க போல! செம கேட்சி சாங் அனிருத்! அராஜகம் பண்றிங்க நெல்சன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆதவ் கண்ணதாசனின் இந்த டுவீட்டுக்கு பதிலளித்துள்ள சிவகார்த்திகேயன், ‘தயவு செய்து என்னை கவிஞர்ன்னு எல்லாம் சொல்லாதீங்க. தாத்தா கனவுல வந்து உங்கள அடிப்பாங்க’ என்று கூறியுள்ளார். இந்த காமெடி ட்வீட்டுகள் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.